மீண்டும் நிலாக்காலம் நாமும்

நமக்கோர் நலியாக் கலையுடையோம்

அளவெட்டி மகாஜன சபை கலைஞர் வட்டம் மாதாந்தம் வழங்கி வரும் நிலாக்காலம் கலை நிகழ்வு நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் தடைப்பட்டிருந்தது. மீண்டும் இவ்வாண்டு கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்வுடன் மீண்டும் ஆரம்பமாகின்றது.

செய்தி

மருந்துறைக்கு நிதி……

அளவெட்டி அரசினர் வைத்தியசாலைக்கான மருந்து விநியோகிக்கும் கடிதவுறைகளை கொள்வனவு செய்வதற்காக லண்டன் வாழ் அளவெட்டி மைந்தர் திரு.பொ.கணேஸ்வரன் மற்றும் நோர்வே வாழ் அளவெட்டி மைந்தர் கவிஞர் இ.யோகேந்திரன் ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர். அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தின் மூலமாக வழங்கப்பட்ட இந் நிதியுதவி மூலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மிகுந்த நன்மை பெற்றுள்ளதாகவும் இவ்வாறான சமூகப் பணிகள் பாராட்டத்தக்க விடயங்கள் எனவும் அளவெட்டி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி எஸ்.சேஸ்த்திரபாலன் தெரிவித்தார். வைத்தியசாலை நலன்புரிச் சங்கம் நீண்ட காலமாக இயங்காதிருந்த நிலையில் அண்மையில் மீளவும் திரு.வை.சுப்பிரமணியம் தலமையிலான நிர்வாக குழு தெரிவுசெய்யப்பட்ட நிலையில் பல பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசினர் வைத்தியசாலைக்கென வாகனத் தரிப்பிடம் மற்றும் நோயாளர் காத்திருப்பு மண்டபம் என்பவற்றை அமைக்க வேண்டியிருப்பதாகவும் அதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பலரிடம் நிதியுதவிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நலன்புரிச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் உதவி செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் தலைவர் நலன்புரிச் சங்கம் அளவெட்டி அரசினர் வைத்தியசாலை என்ற முகவரியுடனோ அல்லது 0094213218228 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மக்கள் சங்கம் நிதியுதவி

அளவெட்டி மக்கள் சங்கம் லண்டண் கிளையினர் அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தின் செயற்பாடுகளுக்காக ஒரு தொகை நிதியை (ரூபா 90000.00) மீளவும் வழங்கியுள்ளனர். அளவெட்டி அபிவிருத்தி மன்றம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த சாதனையாளர் கௌரவிப்பையும் கணணி மற்றும் சிங்கள வகுப்பையும் தமது செலவில் நடாத்திவரும் மக்கள் சங்கத்தினர் அபிவிருத்தி மன்றம் மற்றும் மகாஜன சபை ஆகியவற்றின் பணிகளை இலகுபடுத்த மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவருக்கான மாதாந்த வேதனத்தையும் வழங்கி வருகின்றனர். அது மட்டுமன்றி அளவெட்டிக் கிராம பாடசாலைகளில் முன்னர் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையின் போது தொண்டர் ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் மக்கள் சங்கத்தினரே வழங்கி வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.மக்கள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் அவ்வப்போது அளவெட்டிக்கு வருகைதரும் வேளைகளில் அபிவிருத்தி மன்றத்தின் பணிகளை நேரடியாக அவதானித்து வருவதுடன் தமது ஆலோசனைகளையும் பகிர்ந்து வருகின்றனர். அளவெட்டிக் கிராமத்தின் வளர்ச்சிக்காக தம்மால் முடிந்த பங்களிப்பை நல்கி வரும் அளவெட்டி மக்கள் சங்கம் மற்றும் அளவெட்டி நலன்புரிச் சங்கம் சுவிற்சர்லாந்து ஆகியவற்றின் பணிகளை என்றும் மறக்க முடியாது எனத் தெரிவித்த அபிவிருத்தி மன்றத்தின் நிர்வாகிகள் அவர்களது சேவைகள் தொடர்பான பங்களிப்பு அடங்கிய சிறிய கையேடு ஒன்றையும் இவ் வருட வருடாந்த சாதனையாளர் கௌரவிப்பு விழாவின்போது வெளியி்டவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மில் ஸ்ரீ மீண்டும் தேசிய சாதனை

மில் சிறி என அனைவராலும் அறியப்பட்ட திரு. நடராஜா ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு அகில இலங்கை ரீதியில் நடாத்திய சிறுகதைப்போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்று அளவையூருக்கு மீண்டுமொருமுறை பெருமை சேர்த்தார்.

23.01.2012 அன்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் தலைமையில் அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கௌரவ அமைச்சர் இவ்விருதினை வழங்கிக் கௌரவித்தார்.

மகாஜன சபை கலைஞர் வட்ட வெளியீடான ‘ஊருக்குப்போகலாம்’ விபரண இறுவட்டு மற்றும் நிலாக்காலம் இறுவட்டில் வெளியான எமது கிராமத்தின் கீதமான ‘சீருலாவும் கலைகள் யாவும் பொலியும் அளவெட்டி’ எனும் பாடல் மூலமாக இசை உலகில் புகழ்பரப்பியவர். பாடலாக்கத்திற்காக பல தேசிய, மாவட்ட விருதுகளை வென்றதுடன் வலிகாமம் வடக்கு கலாசாரப்பேரவையால் “கலைச்சுடர்” விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்ட மில் ஸ்ரீ அவர்கள் சிறுகதைத்துறையிலும் இவ்விருதின் மூலமாக தடம் பதிக்கின்றார்.

திரு.எஸ்.கணேசலிங்கம், திருமதி. பார்வதி சிவபாதம், ஆகியோரின் குரலில் அற்புதனின் இசையில் உருவான ‘சீருலாவும் கலைகள் யாவும் ‘ பாடலை எமது இணையத்தளத்தின் நிலாக்காலம் பகுதிக்குள் பிரவேசிப்பதன் மூலம் கேட்டு மகிழவும், தரவிறக்கம் செய்யவும் முடியும்.

சாதனைக்கலைஞர், கவிஞர் ந.ஸ்ரீஸ்கந்தராசா அவர்களை பாராட்டி வாழ்த்துவதில் எமது இணையத்தள குழுமம் பெருமை கொள்வதோடு அவரது எதிகால சாதனைப்பயணங்களிலும் கைகோர்த்து நிற்கின்றோம்.

சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்…


உலகில் உள்ள அனைத்தும் போல இலக்கியமும் மாறிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் போர் குணத்துடனும் சில சமயங்களில் பெரும் கூச்சலுடனும் இன்னும் பல சமயங்களில் மொளனித்தும் தமக்கென்ற மாற்றத்திற்கு வழி செய்து கொள்கின்றன.

இந்த மரபுக் கவிதைகள் என்னதான் சொல்கின்றன? எந்த வகையில் அவை மரபுக்கவிதை என்ற பெயரைச் சூடிக்கொள்கின்றன என்று பார்த்தால், மரபுக் கவிதை என்பவை அறம், ஒழுக்கம், மதபோதனை, என்பன பாடுபொருளாகவும், புலமையின் வெளிப்பாடு என்பதும் இங்கே முக்கித்துவம் பெற்று நிற்ப்பதைக்காணலாம் இந்த மரபுகவிதைக்களும் ஒரு காலத்தில் புதுமையானதாவே காணப்பட்டிருக்கும் என்றால் இன்று காணும் புதுக்கவிதையே எமது நாளைய மரபுகவிதை என்பதே உண்மை.

மரபுக்கவிதை காலத்தால் முந்தியது. தொன்றுதொட்டு வரும் தன்மையை மரபு என்கிறோம். தோல்காப்பியம் என்னும் நூல் மூலம் மூவாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய இலக்கண நூல் செய்யுள் தொடர்பான எழுத்து மரபு, பாடுபொருள், யாப்பு ஆகியவைகளைக் கொண்டிருக்கும். இவ்வாறுதான் எழுதப்படல் வேண்டும் என்ற Continue reading

சிலையமைப்பு பணிகள் ஆரம்பம்

அளவெட்டி மகாஜன சபையின் முன்னாள் தலைவரும் சிறந்த சமூகசேவையாளருமான மயில்வாகனம் மாஸ்ரரின் சிலை (செல்லப்பா மயில்வாகனம் ) அவரது ஞாபகார்தமாக அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தினால் சேவாலங்கா மன்ற நிதியுதவியில் அமைக்கப்பட்டு வரும் சிறுவர் பூங்கா வளாகத்துக்குள் தாபிக்கப்பட்டு வருகின்றது. அளவெட்டி மண் தந்த சிறந்த சிற்பியான ரமணி அவர்கள் இச் சிலையை வடிவமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிலையமைப்பு பணிகளுக்கான நிதியினை அளவெட்டியைச் சேர்ந்தவரும் அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான திரு.எஸ்.பத்மநாதன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கற்றல் உபகரணங்கள் வழங்கினார் மயூரதன்

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் உறுப்பினர் திரு.க.மயூரதன் தனது சொந்த நிதியிலிருந்து அருணோதயக் கல்லூரி மற்றும் அளவெட்டி தெற்கு றோ.த.க பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளார். அண்மையில் இப் பாடசாலைகளில் இவ்வாண்டு முதலாம் தரத்துக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வான கால்கோள் விழா நடைபெற்ற போது அந் நிகழ்வுகளில் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த போதே அவர் இக் கற்றல் உபகரணங்களை வழங்கியிருந்தார்.

மீண்டும் நிலாக்காலம்…………

2012ம் வருடத்தின் முதலாவது நிலாக்காலம் கலை நிகழ்வுகள் 01.01.2012 ஞாயிற்றுக்கிழமை புதுவருட சிறப்பு நிலாக்காலமாக மலர்ந்தது. சிறியதொரு இடைவெளியின் பின் மீண்டும் மலர்ந்த நிலாக்கால நிகழ்வு மண்டபம் நிரம்பிய ரசிகர்களோடு புதியதொரு மெருகுடன் சிறப்புற்றது. அளவெட்டி அபிவிருத்தி மன்றம், மகாஜன சபை இணைந்து அனுசரணை வழங்க ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் திரு.க.அருளம்பலம் அவர்களின் இறைவணக்கம், அளவெட்டி அமெரிக்கன் சிலோன் மிஷன் தேவாலய குருவானவர் அருட்திரு. யூட் சுதர்சன் அவர்களின் புத்தாண்டுப் பிரார்த்தனை என்பவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. நிகழ்வுகளுக்கு அளவெட்டி மகாஜன சபையின் தலைவர் திரு. வை.சுப்பிரமணியம் தலைமை வகிக்க விருந்தினர்களாக பதில் மாவட்ட நீதிபதி திரு. த.தம்பி முத்து அவர்களும், வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் ஒளிப்படங்கள் ……………………..

தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

மலர்கின்ற தமிழ்ப்புத்தாண்டு , தமிழர் பெருநாள் தைப்பொங்கல் திருநாள்
அன்பு உறவுகள், நண்பர்கள், நலன்விரும்பிகள்,
மானிடத்தின் உயர்வுக்காய் உழைக்கின்ற உத்தமர்கள்

அனைவருக்கும்
வாழ்வின் உன்னதங்கள் அனைத்தையும் பெறும் திருநாளாகவும்,
நற்பேறுகளை நல்கும் நாளாகவும் தித்திக்க எமது இணையத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

தைத்திருநாள் இல்லமெல்லாம்தளிர்த்திடும் தைப்பொங்கல்

இத்தனை நாள் காத்திருந்தோம்இனிய தமிழ்ப்பொங்கல்

கூவி அழைத்திடும் சேவல்குதித்தெழுவோம் குளிப்போம்

பூவெடுப்போம் புதிதணிவோம்பொங்கலன்று நாங்கள்

கோலமிட்டு விளக்கேற்றிக்கும்பிடுவாள் அம்மா

பாலெடுத்துப் பொங்கலுக்குப்பானை வைப்பார் அப்பா

விரும்பிய மா வாழை பலாவிதவிதமாய்க் கனிகள்

கரும்பிளனீர் படைத்து மனம்களித்திடுவோம் நாங்கள்

வெண்ணிறப்பால் பொங்கி வரவெடி சுடுவோம் நாங்கள்

இன்னமுதப் பொங்கலுண்ணஇணைந்து நிற்போம் நாங்கள்

மகாஜன சபைக்கு சுரேஸ் எம்.பி உதவி…

நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுரேஸ் பிரேமச்சந்திரனின் பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் அளவெட்டி மகாஜன சபைக்கு ஒரு தொகுதி ஒலியமைப்பு உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் திரு.மயில்வாகனம் சிவகுமாரனின் முயற்சியின் பலனாக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மகாஜன சபையின் தலைவர் திரு.வை.சுப்பிரமணியம் தெரிவித்ததோடு இதற்காக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். இவ் உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் வலி வடக்குப் பிரதேச சபை அலுவலகதத்தில் நடைபெற்றது. அதன் போது சபையின் தலைவர் திரு.சோ.சுகிர்தன் மகாஜன சபை நிர்வாகிகளிடம் இப்பொருட்களை கையளித்தார்.

நிதி நெருக்கடி…….

அளவெட்டி அபிவிருத்தி மன்றம் மேற்கொண்டு வரும் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் நிதி நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளதாக அபிவிருத்தி மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கான திறன் விருத்தி வகுப்பு, வருடாந்த கௌரவிப்பு விழா, பௌதிக வளங்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல், மாதாந்த மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துதல் போன்ற பல விடயங்களில் நிதி நெருக்கடியைச் சந்திக்க வேண்டியேற்படுவதாகவும் இவற்றை தீர்ப்பதற்கு புலம்பெயர் உறவுகள் மற்றும் நலன்விரும்பிகள் தமது பங்களிப்பபை நல்க வேண்டுமென அபிவிருத்தி மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி….

அளவெட்டி அபிவிருத்தி மன்றமும் மகாஜன சபை உறுப்பினர்களும் இணைந்து இன்று டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணியினை மேற்கொண்டனர். இச் சிரமதானப் பணியில் தெல்லிப்பளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சிலரும் பிரதேச பொது சகாதாரப் பரிசோதகரும் கலந்து கொண்டனர். அளவெட்டியில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமாக பரவி வரும் நிலையில் தெல்லிப்பளை பொலிசாரும் வலி வடக்கு பிரதேச சபையினரும் இணைந்து கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெற்றுக்காணிகளில் கொட்டப்படும் கழிவுப் பொருட்களினையும் மற்றும் வீடுகளில் உள்ள எரிக்க முடியாத.உக்கும் தன்மையற்ற கழிவுகளையும் பிரதேச சபையினர் தமது உழவு இயந்திரங்கள் மூலம் அகற்றி வருகின்றனர். அதேவேளை பொதுச் சுகாதார பரிசோதகர்களும் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எமது பிரதேச மக்கள் அனைவரும் நுளம்பு பெருக ஏதுவான இடங்களை இல்லாது ஒழிப்பதில் கவனம் செலுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

முதுசம்- காணொளி இறுவட்டு

அளவெட்டிக் கிராமத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.alaveddy.ch இணையத்தளத்தின் வெளியீடாக முதுசம் எனும் எமது பண்பாட்டின் சுவடுகளைச் சுமந்த காணொளி இறுவட்டு வெளிவந்துள்ளது. இதனை இங்கு காணலாம்…
பாகம் 1

பாகம்2

நிலாக்கால அனுசரணையாளர்களுக்கான வேண்டுகோள்

அளவெட்டி மகாஜன சபைக் கலைஞர் வட்டத்தினர் மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று நடாத்தி வரும் நிலாக்கால கலை நிகழ்வுகள் சிறிது காலம் தடைப்பட்டிருந்த நிலையில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009ம் ஆண்டு ஆவணி மாதம் ஆரம்பமான இவ் நிலாக்கால கலைநிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த வருடத்தில் நாட்டில் ஏற்பட்ட கீறிஸ் பூத பிரச்சனையையடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இருந்தும் எமது மண்ணிண் கலைத்திறமைகளுக்கு களம் அமைக்கும் நிலாக்காலத்தை எக் காரணம் கொண்டும் கைவிட்டு விடக்கூடாது எனப் பலரும் கருத்துக்களும் ஆலோசனைகளும் தெரிவித்து வரும் நிலையில் கலைஞர் வட்டத்தினர் மீளவும் நிலாக்காலத்தை நடாத்தும் முடிவை எடுத்து செயற்பட்டு வருகின்றனர். இந் நிலையில் முன்னர் நிலாக்காலம் கலை நிகழ்வுகள் கிராமத்தின் வர்த்தகர்கள் மற்றும் ஊர் மக்களின் பங்களிப்புடனேயே நடைபெற்று வந்தது. சித்திரை மாத சிறப்பு நிலாக்காலம் அளவெட்டி நலன்புரிச் சங்கம் சுவிற்சர்லாந்து அனுசரனையில் முத்தமிழ் விழாவாக மூன்று நாள்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி நிலமை காரணமாக பாதிப்படைந்துள்ள வர்த்தகர்கள் பொதுமக்களிடம் இக் கலை நிகழ்வுக்காக நிதியுதவி கேட்பது தொடர்பில் கலைஞர் வட்டம் தயக்கம் கொண்டுள்ளது. எனவே புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளிடம் இதற்கான நிதியுதிவியை பெறுவது என ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒரு நிலாக்காலத்திற்கான செலவு தற்போது இலங்கைப் பணத்தில் ஆகக் குறைந்தது பதினையாயிரம் ரூபா ஆகின்றது. எமது கிராமத்தின் இளம் பிள்ளைகளுக்கு களம் அமைத்து அவர்களது எதிர்காலத்துக்கு ஒளியேற்றும் இந் நிகழ்வை தொடர்ந்து நடாத்த 11 புலம் பெயர் தமிழர்களை எதிர்பார்த்துள்ளனர் கலைஞர் வட்டத்தினர். நிலாக்கால கலை நிகழ்வுகளுக்கான பிரதான செலவீனங்கள்

  1. முன்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் போது அவர்களுக்கு ஊக்குவிப்பு பரிசில் வழங்குவது
  2. மின்சாரக் கட்டணம்
  3. பங்குபற்றும் கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான உபசரணைச் செலவு
  4. பிரமுகர்களுக்கான கௌரவிப்புச் செலவு
  5. நிகழ்வுகளில் பங்குபற்றும் தொழில்முறைக் கலைஞர்களுக்கான கொடுப்பனவு – நாடக ஒப்பனை பக்கவாத்தியம் போன்ற
  6. ஒலி ஒளியமைப்பு உபகரணங்கள் வாடகை

எனவே எமது உறவுகள் தை, மாசி, பங்குனி, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் தங்கள் மூதாதையரின் நினைவாக இவ் நிலாக்கால அரங்குகளுக்கு நிதியுதவி அளித்து கலை வாழ கரம் கொடுக்க வேண்டுகின்றார்கள் அளவெட்டி மகாஜன சபையினர்….

தொடர்புகளுக்கு

இ.சர்வேஸ்வரா

செயலாளர்

மகாஜனசபை

0094778449739

வே.சிவராஜா

உப செயலாளர்

மகாஜன சபை கலைஞர் வட்டம்

0094772247857

ஆங்கில வகுப்புக்களுக்கு விடுமுறை

அளவெட்டி அபிவிருத்தி மன்றம் மற்றும் அளவெட்டி மகாஜன சபை தெய்வானை முன்பள்ளி ஆகியன இணைந்து நடாத்திவரும் குழந்தைகளுக்கான ஆங்கில மொழி்த்திறன் விருத்தி வகுப்புக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற கலைநிகழ்வுகளை தொடர்ந்து மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை கழித்து 16ம் திகதி வகுப்புக்கள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.  வகுப்புக்கள் மீள ஆரம்பிக்கப்படும் போது முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தி மன்றத்தின் வேண்டுகோள்

adf11
adf21

யாழ்ப்பாணத் தமிழனின் கொலைவெறி………

புத்தாண்டு சிறப்பு நிலாக்காலம்

அளவெட்டி அபிவிருத்தி மன்றமும்
அளவெட்டி மகாஐன சபை கலைஞர் வட்டமும்
இணைந்து நடாத்தும் புத்தாண்டு  சிறப்பு நிலாக்காலம்
காலம்  : 01.01.2012 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 3.00 மணி – இரவு 7.00 மணி வரை
இடம் : மகாஜனசபை மண்டபம்
தலைவர்
திரு.வை.சுப்பிரமணியம்
தலைவர் – மகாஜன சபை
பிரதம விருந்தினர்கள்
திரு.த.தம்பிமுத்து
பதில் மாவட்ட நீதிபதி- மல்லாகம்
திரு.சோ.சுகிர்தன்
தலைவர் வலிவடக்குப் பிரதேச சபை
நிகழ்ச்சி விரிப்பு
அக வணக்கம்
இறை வணக்கம் திரு.க.அருளம்பலம் – ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்
ஆங்கிலத்துறை மாணவர்கள்
மங்கல விளக்கேற்றல்
வரவேற்புரை : திரு.வி.ஜெபறின் ததீஸ் உறுப்பினர் மகாஜன சபை கலைஞர் வட்டம்
ஆசியுரை : அருட்திரு வண. யூட் சுதர்சன் அடிகள் – அமரிக்கன் சிலோன் மிசன் சபை
சிவஸ்ரீ சோம.குமாரதாசக்குருக்கள் – பிரதம குரு கும்பழாவளை விநாயகர் ஆலயம்
தொடக்கவுரை – திரு.வே.சிவராஜா – தலைவர் அளவெட்டி அபிவிருத்தி மன்றம
தலமையுரை
ஆங்கில மொழி விருத்தி துறை ஆசிரியர்கள் உரை
பிரதம விருந்தினர் உரை
கலை நிகழ்வுகள்
தெய்வானைப்பிள்ளை ஆங்கில மொழித்திறன் விருத்திக்கான முன்பள்ளி மாணவர்கள்
அளவெட்டி அபிவிருத்தி மன்ற ஆங்கிலத்துறை மாணவர்கள்
மகாஐன சபை ஈஸ்வரன் முன்பள்ளி மாணவர்கள்
சிறப்பு புத்தாண்டு இசையரங்கு
அளவெட்டி அமரிக்கன் சிலோன் மிசன் சபையினரும் மகாஜன சபை கலைஞர் வட்டத்தினரும்
இணைந்து வழங்கும்
நிலாக்கால இசையரங்கு
நன்றியுரை திரு.ம.யோ.இதயராஜ் உறுப்பினர்- அளவெட்டி அபிவிருத்தி மன்றம்

அளவெட்டி அபிவிருத்தி மன்றமும்

அளவெட்டி மகாஐன சபை கலைஞர் வட்டமும்

இணைந்து வழங்கும் புத்தாண்டு சிறப்பு நிலாக்காலம்

காலம் – 01.01.2012 ஞாயிற்றுக்கிழமை

நேரம்மாலை 3.00 மணிஇரவு 7.00 மணி வரை

இடம்மகாஜனசபை மண்டபம்

தலைவர்

திரு.வை.சுப்பிரமணியம்

தலைவர்மகாஜன சபை

பிரதம விருந்தினர்கள்

திரு..தம்பிமுத்து

பதில் மாவட்ட நீதிபதி- மல்லாகம்

திரு.சோ.சுகிர்தன்

தலைவர்

வலிவடக்குப் பிரதேச சபை

நிகழ்ச்சி விரிப்பு

ª அக வணக்கம்

ª இறை வணக்கம் திரு..அருளம்பலம்

ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்,

ஆங்கிலத்துறை மாணவர்கள்

ª மங்கல விளக்கேற்றல்

ª வரவேற்புரை : திரு.வி.ததீஸ் ஜெபறின் தாஸ்

உறுப்பினர் மகாஜன சபை கலைஞர் வட்டம்

ª ஆசியுரை : அருட்திரு வண. யூட் சுதர்சன் அடிகள்

அமரிக்கன் சிலோன் மிசன் சபை

சிவஸ்ரீ சோம.குமாரதாசக்குருக்கள்

பிரதம குருக்கள்

கும்பழாவளை விநாயகர் ஆலயம்

ª தொடக்கவுரைதிரு..யோ.இதயராஜ்

உறுப்பினர்- அளவெட்டி அபிவிருத்தி மன்றம்

ªதலைமையுரை

ª ஆங்கில மொழி விருத்தி துறை ஆசிரியர்கள் உரை

ªபிரதம விருந்தினர் உரை

கலை நிகழ்வுகள்

§ தெய்வானைப்பிள்ளை ஆங்கில மொழித்திறன் விருத்திக்கான முன்பள்ளி மாணவர்கள்

§அளவெட்டி அபிவிருத்தி மன்ற ஆங்கிலத்துறை மாணவர்கள்

§மகாஐன சபை ஈஸ்வரன் முன்பள்ளி மாணவர்கள்

சிறப்பு புத்தாண்டு இசையரங்கு

அளவெட்டி அமரிக்கன் சிலோன் மிசன் சபையினரும்

மகாஜன சபை கலைஞர் வட்டத்தினரும்

இணைந்து வழங்கும்

நிலாக்கால இசையரங்கு

ª நன்றியுரை திரு.கை.சரவணன் –

செயலாளர்,

அளவெட்டி அபிவிருத்தி மன்றம்

Watch live streaming video from puveenthan at livestream.com

புது வருட நல்வாழ்த்துக்கள்

மலர்கின்ற புதிய ஆண்டில்

நல்ல சிந்தனைகள் செயல்களாகவும்,

ரம்மியமான மனோரதங்கள் கை கூடவும்,

இனியவைகள் யாவும் ஈடேறவும்

எங்கள் இணையத்தள குழுமம்

அன்புறவுகள் அனைவரையும் வாழ்த்தி நிற்கின்றது.

மகாராஜன் காலமானார்

அளவெட்டிக் கிராமத்தில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுள் முக்கியமானவரான திரு தம்பிமுத்து மகாராஜன் இன்று காலமானார். அளவெட்டி தெற்கு பிரதான வீதியை வதிவிடமாகக் கொண்ட இவர் ஓர் ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தர் ஆவார். அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் கோவில் நிர்வாக சபைச் செயலாளர் அளவெட்டி மல்லாகம் ப.நோ.கூ சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினர் தெல்லிப்பளை மத்தியஸ்தர் சபை உறுப்பினர் என பெறுமதியான பதவிகளினூடாக சமூகப் பணியில் கனதியான இடத்தை வகித்திருந்தார். இவரது இழப்பு இவரது சேவையால் பயன்பெற்ற மக்களுக்கு பெரும் இழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயர் கொள்ளும் இதயங்கள் அனைத்துடனும் நாமும் இணைகின்றோம்.

சுகி சிவமும் சொல்கிறார்..கேளுங்கள்…

மரணஅறிவித்தல்-சின்னத்தம்பி விநாயகமூர்த்தி

New Picture 45

அருணோதயம் 2011 புகைப்படத்தொகுப்பு..

அளவெட்டி நலன்புரிச் சங்கம் சுவிற்சர்லாந்து நடாத்திய அருணோதயம் முத்தமிழ் விழாவின் புகைப்படத்தொகுப்பினை இங்கு காணலாம்

புகைப்படங்கள்

அளவை ஊரது அழகான ஊரது… பாடல்

குரல் இசை மற்றும் இயக்கம் இராகவி உருத்திரேஸ்வரன்

வரிகள் சின்னையா சிவராஜா

முதலாம் ஆண்டு நினைவில்

அளவெட்டி மக்கள்வங்கி திறப்பு விழா