பிரான்சிலும் பழைய மாணவர்….
அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துக்கான வெளிநாட்டுக் கிளைகளில் ஒன்றாக பிரான்ஸ் நாட்டிலும் பழைய மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்டவுள்ளது. அதற்கான அங்குரார்ப்பண கூட்டம் எதிர்வரும் 20.05.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு DEVI MAHAL No:246 Avenue President Wilson , 93210 Plain Saint_ Denis எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. எனவே இக் கூட்டத்தில் பிரான்ஸ் நாட்டிலுள்ள அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தின் அனைத்துலக இணைப்பாளர் திரு.செல்லையா சிறிகாந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்…நந்தன் 0668356210 மற்றும் சிறிக்காந்தன் 00447525740166
மரண அறிவித்தல்-திரு. தாமோதரம்பிள்ளை அருளானந்தம்
யாழ்ப்பாணம் வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும் அளவெட்டி, இங்கிலாந்து ஆகியவற்றை வதிப்பிடமாகவும் கொண்ட திரு தாமோதரம்பிள்ளை அருளானந்தம் அவர்கள் (இளைப்பாறிய உதவி அதிபர், இந்துக் கல்லூரி, பண்டத்தரிப்பு) இன்று திங்கட்கிழமை (07 மே 2012) இறைவனடி சேர்ந்தார்.
அபிவிருத்தி மன்றத்துடன் கைகோர்த்த நோர்வே உறவுகள்
இந் நிதியுதவியில் பங்களித்த கீழ்வரும் உறவுகளுக்குஅபிவிருத்தி மன்றத்தின் நன்றிகள்..
மருந்து உறைகள் அன்பளிப்பு
சூசையப்பர் தேவாலய பெருநாள் காட்சிகள்…
அன்னதான மடம் திறப்பு…..
புகைப்படத்தொகுப்பைக் காணலாம்
திருப்பள்ளியெழுச்சி இறுவட்டு வெளியீடு
வந்தது முதல் நிதி…
சண்டிலிப்பாய் இந்துவை பந்தாடியது மகாஜனா
கடந்தவாரம் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி அணியை எதிர்த்து மகாஜனக்கல்லூரி அணி மோதிக்கொண்டது.
ஆரம்பத்தில் இருந்தே மகாஜனக்கல்லூரி வீராங்கனைகள்அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லாம் Continue reading
அமைக்கப்படாத தபாலகம் காத்திருக்கும் காணி
அளவெட்டி தபாலகத்துக்கு சொந்த கட்டடம் அமைக்கவென சுவிஸ் வாழ் அளவெட்டி மைந்தர் செல்லத்துரை சிவபாலன் தனது சொந்தப் பணத்தில் வாங்கி தபால் திணைக்களத்துக்கு வழங்கிய காணி பல ஆண்டுகளாக தபாலக வருகைக்காக காத்துள்ளது. அரசஅதிபர் கணேஸ் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு மறக்கப்பட்ட இவ் விடயம் தொடர்பில் பல்வேறு தடவைகள் பல்வேறு தரப்பினருடனும் அளவெட்டி மக்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர். எனினும் எந்தவிதமான அக்கறையும் எடுக்கப்படவில்லை. தபாலகம் அமைப்பது தொடர்பாக பல காற்றில் பறந்த உறுதிமொழிகள் கலாவதியாகிவிட்டன என அளவெட்டி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடமாகாண அஞ்சல் மா அதிபரே இந்த விடயம் உங்களுக்கு சமர்ப்பணம்…..
தவளக்கிரி அம்மனின் கும்பாபிடேகம் நேரடி ஒளிபரப்பு
எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அளவெட்டி வடக்கு தவளக்கிரி முத்துமாரி அம்மனின் மகா கும்பாபிடேக நிகழ்வு எமது இணையத்தளத்திலும் ஆலயத்துக்கென அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட www.alaveddythavalakiriamman.com இணையத்திலும் ஒளிபரப்படுகின்றது. எனவே இவ் தகவல்களை அம்பிகை அடியார்களுக்கு தெரியப்படுத்துவோம்..
விரிவுரையாளராக நியமனம்

அளவெட்டியை பூர்விகமாகக் கொண்ட சுந்தரமூர்த்தி கபிலன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக புவியியற்துறையில் திட்டமிடல் துறை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரி பழைய மாணவனான இவர் மகாஜன சபை கலைஞர் வட்டத்தின் இசைத்துறை இணைப்பாளராக கலைப் பணி ஆற்றுகின்றார். இசைத்துறை கலைஞராக தன்னை தக்கவைத்துள்ள கபிலன் திட்டமிடல் துறையின் முதலாவது நிரந்தர விரிவுரையாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு எமது இணைய குழுமத்தினதும் அளவை சமூகத்தினதும் வாழ்த்துக்கள்…
‘ பெரியபுராணம்’ சொற்பொழிவுத்தொடர் நிகழ்வு
- அளவெட்டி மகாஜன சபை கலைஞர் வட்ட செயலாளர் மகாஜனாக்கல்லூரி ஆசிரியர் திரு.வை. விஜயபாஸ்கர்
- கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி விரிவுரையாளர் ‘ செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன்
- சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர் ‘செஞ்சொல்வேந்தர்’ எஸ்.ரி.குமரன்
- ஊர்காவற்றுறை சமூக சேவை அலுவலர் திரு.வே.சிவராஜா
- யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப்பதிவாளர் திரு.இ.சர்வேஸ்வரா
- பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை உதவி விரிவுரையாளர் திரு.கே.எஸ்.ரமணன்
- யாழ் செயலக நிகழ்ச்சித்திட்ட உதவியாளர், இந்துநாகரிகத்துறை ஆசிரியர் திரு.க.கோபிராஜ்
- திரு.வை. விஜயபாஸ்கர்,
- ‘செஞ்சொல்வேந்தர்’ எஸ்.ரி.குமரன்,
- செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன்,
- திரு.இ.சர்வேஸ்வரா
- திரு.வே.சிவராஜா,
சித்திரை மாத சிறப்பு நிகழ்வுகள்
ஸ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய கும்பாபிஷேகம் 25.04.2012
அளவெட்டி வடக்கு (தவளக்கிரி)
அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய புனருத்தாரண
நவகுண்டபக்ஷ அஷ்டபந்தன
கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 25.04.2012
கர்மாரம்பம் 19.04.2012 எண்ணெய்க்காப்பு 23,24 .04.2012
அம்பிகை மெய்யடியார்களே !
விராட் புருடனது இடைநாடியானதும் தென்தட்சிணகைலாயமென போற்றப்படுவதும் இறைவனை இசைய வைக்க சாமகானம்மீட்டிய தமிழ்மன்னனாம் இராவணேஸ்வரனால் பலகோடி லிங்கப்பிரதிஸ்டைகள் செய்யப்பட்டு இலங்கையானதும் சைவநாயன்மாரால் பாடப்பெற்றபஞ்ச ஈச்சரங்களை தன்னகத்தே கொண்டதுமாகிய ஈழமணித்திருநாட்டின் வடபால் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் இசைபாடிப்பரிசாய யாழ்ப்பாணத்தின் கண் இசை விளைநிலமாம்- பல் இசைமேதைகளையும் பல்துறை சிவதொண்டர்களையும் கொண்ட அளவெட்டிப்பதியின் வடபால் தவளக்கிரியில் எழுந்தருளி அருளாட்சிபுரியும்அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்பாளுக்கு நிகழும் மங்களகரமான நந்தன வருஷம் சித்திரைத்திங்கள் 13ம்நாள் (25.04.2012) புதன்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 1.30 மணி வரையுமுள்ள மிதுன லக்கினமும் மிருகசீரிட நட்சத்திரமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில்நவகுண்டபக்ஷ அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற புவியடங்கக்காத்த திரிபுரசுந்தரியாம் அன்னை அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்பாளின் திருவருள் கைகூடியுள்ளமையால் அம்பிகை அடியார்கள் அனைவரும் மேற்படி புனிதநிகழ்வில் கலந்துகொண்டு அம்பிகையின் அருட்கடாட்சத்தினைப் பெற்றுய்ய வேண்டுகின்றோம்
மரண அறிவித்தல் – திருமதி.கதிரேசர்பி்ள்ளை
-Sooriyan Bala balasooriyan@yahoo.com
டென்மார்க் தமிழர் வாழ்வியல்
;
;
;
;
;
டென்மார்க்கில் தமிழர் வாழ்விலும், கலாச்சார வைபவங்களிலும் கடந்த 25 வருட வரலாற்றில் புதிய திருப்பங்கள் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது. இந்த மாற்றங்களை வழமைபோல தீமையானது என்று பார்க்காமல் நல்ல விடயங்களே என்ற கோணத்தில் அவதானிக்க வேண்டும்.
திருமணங்கள், பூப்புனித நீராட்டுவிழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள் போன்றன முழுமையான கலாச்சார நிகழ்வுகளாக மாற்றமெடுத்துக் கொண்டிருக்கின்றன. முன்னைய காலங்களில் மதியம், தவறினால் பி.ப. ஐந்து மணியளவில் முடிவடையும் நிகழ்வுகள் இப்போது இரவு பத்து மணிவரை நீடிப்பு பெறுகின்றன. இதனால் ஒரே நாளில் பல நிகழ்வுகள் நடந்தாலும் அனைத்திற்கும் அவசரப்படாமல் போக முடிகிறது. மக்கள் இங்கும் அங்குமாக சுழன்று கொண்டிருக்க, நிகழ்வுகளும் புதிய புதிய முகங்களுடன் நிமிடத்திற்கு நிமிடம் புதுப்பொலிவு பெற்றுவிடுகிறது.
மண்டப அலங்காரங்களில் புதிய மாற்றங்கள் புகுந்துவிட்டன. தாயகத்தில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக மாற்றமின்றி பாவனையில் இருந்த யாழி பூட்டிய பாரம்பரிய மணவறைகள் Continue reading
நந்தனவருட புத்தாண்டு கொடுக்கல்வாங்கல்கள்
அளவெட்டி மக்கள் வங்கி முகாமையாளர் இதுபற்றி கருத்துத்தெரிவிக்கையில் எதிர்பார்த்ததனை விட சிறப்பாக வாடிக்கையாளர்கள் சேமிப்பினை மேற்கொள்வதாகவும் வங்கி உத்தியோகத்தர்கள் அதிகமான வேலை நெருக்கடியினை எதிர்நோக்குகின்ற போதிலும் விரைவான சிறப்பான சேவையினை வழங்கிவருவதாக குறிப்பிட்டார்.
இலங்கை வங்கியிலும் கணிசமான வாடிக்கையாளர்கள் பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருந்தனர் எனினும் இலங்கை வங்கி நேரடியான வங்கி வலையமைப்பில் ( Online /Bank network system ) இணைக்கப்படாமையால் சில வாடிக்கையாளர்கள் இவ்வலையமைப்பு வசதியுள்ள மல்லாகம், சுன்னாகம் இலங்கை வங்கிக் கிளைகளை நாடிச்செல்லும் நிலை காணப்பட்டது.
அமெரிக்கன் சிலோன்மிஷன் தவக்காலஇசைநிகழ்வு
தூரநோக்கும் செயல் விருப்பும் கொண்டகோணேஸ்வரன்
கோணேஸ்வரன் நினைவு தினநிகழ்வுகள்
அளவெட்டி கோணேஸ் மற்ஸ் அக்கடமியின் நிறுவுனர் அமரர் நாகராஜா கோணேஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினநிகழ்வுகள் உணர்வுபூர்வமாக கல்வி நிறுவன சமூகத்தால் அனுஷ்டிக்கப்பட்டது. 10.04.2012 அன்று அன்னாரின் ஓராண்டு நினைவு தினத்திற்கு முன்னோடியாக கல்விநிறுவன பழையமாணவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் இணைந்து Continue reading


















































































































