கும்பழாவளைப் பிள்ளையார் 7ம் திருவிழா இன்று மிகச்சிறந்த தவில், நாதஸ்வரக்கலைஞர்கள் மங்களவாத்தியம் இசைக்க காலை 10.00 மணியளவில் வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி தொடர்ந்து சுவாமி உள்வீதி உலாவரும் காட்சி இடம்பெறும். இன் நிகழ்வினை நேரடியாக இங்கு ஒளிபரப்பப்படும். மாலையும் மிகச்சிறந்த தவில், நாதஸ்வரக்கலைஞர்கள் மங்களவாத்தியம் இசைக்க மாலை 6.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட வானவேடிக்கைகள் இடம்பெற சுவாமி உள்வீதி, வெளிவீதி உலாவரும் காட்சி இடம்பெறும். இன் நிகழ்வினை நேரடியாக இங்கு ஒளிபரப்பப்படும். (நேரங்கள் இலங்கை நேரப்படி)
Category Archives: செய்தி
கும்பழாவளைப் பிள்ளையார் (7ம் திருவிழா) நேரடியாக இங்கு ஒளிபரப்பப்படும்.
திருவிழா நேரடி ஒளிபரப்பு
15.05.2013 புதன்கிழமை ஆரம்பமாகிய அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் ஆலய விஜய வருட மகோற்சவ தின முக்கிய நிகழ்வுகள் எமது அளவெட்டி இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகம் எங்கும் பரந்து வாழும் அளவை உறவுகள் பின்வரும் இலங்கை நேர அட்டவணைப்படி நிகழ்வுகளை கண்டுகளிக்கலாம்.
கும்பழாவளைப் பிள்ளையார் (6ம் திருவிழா)
கும்பழாவளைப் பிள்ளையார் (5ம் திருவிழா)
மரண அறிவித்தல் – அருணகிரிநாதன் இராமநாதன்
அருணகிரிநாதன் இராமநாதன்
தோற்றம்: 07.11.1952 – மறைவு: 17.05.2013
அளவெட்டி தெற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் சூரிச் நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருணகிரிநாதன் அவர்கள் 17.05.2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராமநாதன், நேசமலர் ஆகியோரின் சிரேஷ்ட புத்திரனும் காலம்சென்ற கந்தையா மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மருமகனும்,
பத்மலோசனியின் அன்புக் கணவரும், சிந்துஜா அவர்களின் பாசமிகு தந்தையாரும்
இந்திராணி (இலங்கை), தில்லைநாதன் (கனடா), யோகநாதன் (கனடா), பராசக்தி (சுவிஸ்), அருந்ததி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்
கும்பழாவளைப் பிள்ளையார் (4ம் திருவிழா)
மேய்ப்பன் எனக் காப்பாய் போற்றி (2ம் திருவிழா)
கொம்பொடித்துப் பாரதத்தை தந்தாய் போற்றி
நம்பி நிற்கும் அன்பர் தமக்கருள்வாய் போற்றி
வம்பு வழக்கு வாராது காப்பாய் போற்றி
தும்பிமுகத்து ஐங்கரனே போற்றி போற்றி
தந்தை தாயொடும் வீதிவலம் வந்தாய் போற்றி
முந்தை வினை தீர்த்திடு மூசிகவாகனனே போற்றி
மந்தை யென தடம்மாறும் நம்மோர் வாழ்வை
வந்திருந்து மேய்ப்பன் எனக் காப்பாய் போற்றி போற்றி
கணபதியே கஜமுகனே காப்பாய் போற்றி
குணமுடையோர் குறை தீர்ப்பாய் போற்றி போற்றி
மணங்கமழும் மலர்மாலை அணிந்தாய் போற்றி
வணங்குவோரின் வல்வினைகள் களைவாய் போற்றி
சா.தணிகாசலபதி





















































































































































































































