ஞான வைரவர் விளையாட்டுக் கழக விளையாட்டு விழா
ஞான வைரவர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழா கடந்த 02.04.2010 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஞானவைரவர் சனசமூக நிலையத்தின் தலைவர் திரு.தா.கிருபானந்தன் தலமையில் நடைபெற்ற இவ் விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி வடக்கு பிரதேச செயலக விளையாட்டுத் துறை உத்தியோகத்தர் திரு.கு.முகுந்தன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக மகாஐனக் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் திரு.பொ.சுந்தரலிங்கம் மற்றும் அளவெட்டிப் பிரதேச கிராமசேவையாளர்கள் கலந்து கொண்டனர். பெரியதம்பிரான் ஆலய முன்றலில் நடைபெற்ற இவ் விளையாட்டு நிகழ்வுக்கு முன்னதாக ஆண் பெண் இருபாலாருக்குமான மரதன் ஓட்டம் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டம் என்பனவும் நடைபெற்றன.














































































































