நூற்றாண்டு விழாப் போட்டிகள்
அருணாசலம் வித்தியாசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட மரதன் மற்றும் துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டிகளின் காட்சிகளையும் வெற்றி பெற்ற வெற்றியாளர்களையும் படங்களில் காணலாம்.இப் போட்டியின் விருந்தினர்களாக அளவெட்டி தபால் நிலைய அதிபர் திருமதி.எஸ்.ஞானேஸ்வரன் அளவெட்டி தெற்கு கிராம சேவையாளர் திரு.ந.உமாகாந்தன் மற்றும் கிராமசேவையாளர் திரு.ப.துவாரகன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர் திரு.பா.பிரதீபன் ஆரம்பித்து வைத்தார். (படங்கள்: குட்டி சர்வேஸ்)





























