வைகாசி நிலாக்காலம்
வைகாசி மாதத்துக்குரிய நிலாக்காலம் நிகழ்வுகள் சுண்ணாகம் தாஸ் கலர் லாப் தாட்சா மல்லி பொயின்ற் மற்றும் மகிந்தன் கணணிப்பதிப்பகம் ஆகிய நிறுவனங்களின் அனுசரணையில் 31.05.2010 திங்கள்கிழமை அளவெட்டி மகாஐன சபை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அளவெட்டி மகாஐன சபை கலைஞர் வட்டத் தலைவர் திரு.வை.விஐயபாஸ்கரன் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இறைவணக்கத்தை சங்கீதபூசணம் வி.கே.நடராஜாவும் வரவேற்புரையை திரு.கை.சரவணணும் நிகழ்த்தினர். தலமையுரையைத் தொடர்ந்து தொடக்கவுரையை நிகழ்வின் அனுசரணையாளர் திரு.அ.தவதாஸ் நிகழ்தினார். கலை நிகழ்வுகளாக இசை ஆசிரியை திருமதி.ஜெயந்தினி ஈஸ்வரனின் இசை நிகழ்வு முதலில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு அணிசெய் கலைஞர்களாக வயலின் ஆசிரியை திருமதி.தெ.சௌந்தரராஐனும் மிருதங்கம் ஆசிரியர் திரு.சி.சிவசிவாவும் இசைத்தனர். தொடர்ந்து யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகம் வழங்கிய இசை நாடகப் பாடல்களின் மேடை நிகழ்வு இடம்பெற்றது.

Vaalthukkal