வருடாந்த பரிசளிப்பு விழா
அருணோதயக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா அதிபர் திரு.நா.கேதீஸ்வரன் தலமையில் சிறப்பாக நடைபெற்றது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கதிர்காமசேகரம் திறந்த வெளி அரங்கில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவன் வைத்தியகலாநிதி க.உருத்திரன் பிரதம விருந்தினராகவும்
ஓய்வு பெற்ற உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.பாலசிங்கம் வலிகாமம் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.மு.நடராஜா தெல்லிப்பளை காவல்துறை பொறுப்பதிகாரி காமினி ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் வரவேற்புரையை கல்லூரியின் மாணவ தலைவி அ.லிதர்சினியும் ஆசியுரையை திரு.பிரதாபசர்மாவும் நன்றியுரையை பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.பா.பிரதீபனும் வழங்கினர்.














