பரிசு பெற்றார்
அளவெட்டி மகாஜனசபை – கஞைா் வட்டம் மாதந்தோறும் பெளா்ணமி தினத்தில் நடாத்திவரும் நிலாக்காலம் எனும் கலைச்சங்கம நிகழ்வின் வரிசையில் சித்திராபெளா்ணமி தினத்தை முன்னிட்டு சித்திரை மாத சிறப்பு நிலாக் காலம் அளவெட்டி நலன்புரிச் சங்கம் – சுவிஸ் அனுசரணையில் நடைபெற்றமை தெரிந்ததே. இந்நிகழ்வினையொட்டி புலம் பெயர்ந்து வாழும் அளவெட்டி உறவுகள் மத்தியில் நடாத்தப்பட்ட கலை இலக்கிய ஆக்கத்திறன் போட்டியில் முழுமை கண்ட முந்தையர் வாழ்வு எனும் தலைப்பிலான கட்டுரைக்காக முதலாம் பரிசினை திருமதி.ப.நர்மதா அவா்கள் (சுவிஸ்) பெற்றுக் கொண்டார். அளவெட்டியில் நடைபெற்ற நிலாக்கால நிகழ்வில் திருமதி.நர்மதாஅவர்களுக்கான பரிசினை மகாஜனசபையின் தலைவா் வை.சுப்பிரமணியம் வழங்கிக்கௌரவித்தார். நர்மதா சார்பாக அவரது தந்தையார் திரு.வை.பாலச்சந்தின் அவர்கள் இப்பரிசினைப்பெற்றுக் கொண்டார்.
