கும்பழாவளைத் தெய்வமே……பாமாலை

DSC00618பவனஞ் சுடர் கங்கை பார் வெளியை யாட்டிடும்

பரம சிவஞான மகனே

புவனங்களீரேழு மடக்கியே காத்திடும்
புவனேஸவரி யீன்ற புவனே
கவளமாமுகத் தண்ணலே காத்திடு
மங்குசபாசக் கையனே
குவளைக் கண்ணியை சென்னியில் மிலைந்த
கும்பழாவளைத் தெய்வமே
காண்பவர்க கரியனே காட்சிக் கினியனே
கருணை சொரி யானை முகனே
மாண்பெருகு மாருத வல்லிக்குப் பிணி தீர்த்து
மனம் புர்த்து மகிழ்வுண்டாக
விண்டுவின் தளைநீக்க வீரமுருகேசனுடன்
விரும்பியுரை செய்த விமலா
கொண்டல் தவழ ளவையெனுங் குருபதியில்
கோவில் கொண்ட கும்பழாவளைத் தெய்வமே
தெங்குகுலை சொரிகின்ற தேனீரால் முழுக்காடும்
தேவர ளவை யுருறையு நாதா
பங்குகொள் தொண்டரின் பாச வினையறுக்கின்ற
பண்ணவன் பெற்ற மகனே
துங்குவெண் நெஞ்சினில் பங்குகொள் ளாணவ
பாசத்தை நீக்குகின்ற
அங்குச பாசத்தாலதை யடக்கியே யருள்தரு
கும்பழாவளைத் தெய்வமே
பண்ணிறைந்த பாடல்களைப் பாடடியும் நான்
நின்பாதம் பணிந்து நின்றேன்
கண்ணிறைந்த கணபதியே கற்பகமே
கலைநிதியே காட்சி தந்து
விண்ணுலகஞ் சோ்வதன் முன் விரும்பு வரம்
தந்தென்னை விரைந்து காப்பாய்
குணங்காணக் கோதிலா மணம் பெருகக்
குவலயத்தைக் காக்கின்ற கும்பழாவளை தெய்வமே
பொங்கு புகழளவையிலே புகுந்த போது
உன் புந்தி தனில்
சங்கம் முழங்கியதோ சாமரைகள் வீசினதோ
சதிரே யாடும்
மங்கையர்கள் பாடினரோ மன்னவர் பணித்தனரோ
மன்னா சொல்வாய்
குங்குமத்தின் குழைத்தேய்வு குமுறி மணம் நாறுகின்ற
கும்பழாவளைத் தெய்வமே
அஞ்சடுக்குத் தீபமதை அருகிருக்கு மந்தணர்கள்
எடுத்து ஆட்ட
வஞ்சமனுக் கவியினுள்ள பஞ்ச வுணர்
சுட்டுபொடி சாம்பராக்கி
கஞ்சமலர்ச் சேவடியான் கழலொலிக்க
மணிநாத மேலொலக்க
கொஞ்சுகரங் ௯ப்பிநிற்பார் குலங்காக்கும்
கும்பழாவளைத் தெய்வமே
அளவை கவிக்குமரன் கலைஞானமணி லம்போ

Advertisement

Comments are closed.