அளவை மைந்தன் சேரனுக்கு சர்வதேசக் கவிஞர் விருது

அளவெட்டியின் மைந்தனும் மகாகவி உருத்திரமூர்த்தியின் புதல்வருமான ஈழக் கவிஞர் சேரனுக்கு சர்வதேசக் கவிஞர் எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது. 

சேரன் உருத்ரமூர்த்தி, கனடாவின் வின்ட்சர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இதேவேளை ONV அறக்கட்டளை மூலமே சேரன் உருத்ரமூர்த்தி கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார்.

இந்திய தூதரகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் பெப்ரவரி 17 ஆம் திகதி இந்த விருது வழங்கிவைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Harithamanasam என்ற தலைப்பின் கீழே குறித்த நிகழ்வு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Comments are closed.