அருணோதயாக் கல்லூரி

ஒன்றே கால் நூற்றாண்டை அண்மித்திருக்கும் அளவை அருணோதயக்கல்லூரி இன்று புதிய மாடிக்கட்டிடங்களையும், புதிய ஆய்வுகூடத்தினையும், சிறந்த நேர்த்தி மிக்க மைதானத்தினையும் பூஞ்சோலைகளையும் கொண்டு திகழ்கின்றது. ஒரு கிடுகுக்கொட்டிலில்1894 இல்ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே இன்று ஆலவிருட்சமென உருவெடுத்து நிற்கின்றது. இக் கல்லூரிதிரு. நாகமுத்து அருணாசலவுடையாரால் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆரம்பகால முதன்மையாசிரியர்திரு.மு.செல்லப்பாச்சட்டம்பியார் ஆவார். அவருக்கு உதவியாசிரியர் பரமுச்சட்டம்பியார் ஆவார். 1898 அளவில் பதவியேற்ற சின்னத்தம்பிச்செட்டியாரின் முயற்சியினால் இது ஆண்கள் ஆங்கில ஆரம்பப்பாடசாலையாக முழுமையடைந்தது. 1904 இல் அரசினர் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகியது. திரு க.சோமசுந்தரம் தலைமைப்பதவியேற்றதிலிருந்து இது ஆரம்பப்பாடசாலை என்ற நிலையிலிருந்து எட்டாம் தரம்வரையுள்ள பாடசாலையாக வளர்ச்சி கண்டது. இவருக்குப்பின்னர் கடமையேற்ற திரு.த.சின்னத்தம்பி(1929) அவர்களின் காலத்தில் இப்பாடசாலை ஆண்கள் பாடசாலை என்ற நிலையிலிருந்து மாறி கலவன் பாடசாலையாகி துரித வளர்ச்சி பெற்றது. இவர் கல்வியில் மட்டுமன்றி மாணாக்கர் ஒழுக்கத்திலும் கண்ணும்கருத்துமாக இருந்தார். இவர் ஓய்வுபெற்ற பின் திரு.ப.நவரத்தினம் ஒரு வருடம் தலைமையாசிரியாராகவிருந்தார். இவரின் பின்திரு.எஸ்.கிருஸ்ணபிள்ளை என்ற தமிழக அறிஞர் தலைமையாசிரியரானார். இவரது காலத்தில் அருணோதயக்கல்லூரியின் பொன்விழாக்கொண்டாடப்பட்டது.

திரு.கிருஸ்ணபிள்ளையைத்தொடர்ந்து பாடசாலைத்தாபகரின் பேரனும் குறிப்பிட்டகாலமொன்றில் இப்பாடசாலை ஆசிரியருமாகவிருந்த திரு.அ.சுப்பையா அவர்களின் புதல்வராகியதிரு.சு.சிவசுப்பிரமணியம் அவர்கள் அதிபரானார். இவரது காலத்தில்(1949) சிரேட்டததராதரப்பத்திர வகுப்பு (S.S.C) ஆரம்பிக்கப்பட்டது. இவரது காலத்தில் பாடசாலை பலவழிகளாலும் முன்னேற்றமடைந்தது. பாடசாலை என்ற நிலை மாறி கல்லூரியென்ற நிலையேற்பட்டது. அருணோதய உடையார் கல்லூரி என்ற தொனிப்பொருள் அமைய அருணோதயக்கல்லூரி என்ற பெயர் சூட்டப்பட்டது(1951). விஞ்ஞானக்கல்வித்தேவையைப் பூர்த்தி செய்ய முதல்முறையாக இந்தியாவிலிருந்து விஞ்ஞானப்பட்டதாரி ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது.இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் முதன்முதலாக மிகச்சிறப்பாக நடத்தப்பட்டன. 1952 இல் அதிபர் அறைக்காரியாலயம், விஞ்ஞான ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டன.

விளையாட்டுத்துறையிலும் அருணோதயக்கல்லூரி பல சாதனைகளைப் படைத்தது. விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியராகவிருந்த திரு.க.நாகமணி அவர்கள் காலத்திலும்திரு.ஏ.தம்பித்துரை அவர்கள் காலத்திலும் பல சாதனைகளைப் படைத்தது. 1960இல் கல்லூரி உதைபந்தாட்டக்குழு முதல்முறையாக மாவட்டமட்டத்தில் பங்குபற்றி மாவட்டச்சம்பியனானது. ஹொக்கி விளையாட்டு இலங்கையிலேயே குறிப்பிட்டுச்சொல்லத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருந்தது.

1961 இல் அரசாங்கப்பாடசாலையாகக்கையளிக்கப்பட்டது.இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு வித்திட்டதிரு.சு.சிவசுப்பிரமணியம் அவர்கள் பதவி உயர்வுபெற்றுச்செல்ல, திரு.சிதம்பரப்பிள்ளை என்பவர் அதிபரானார். இவரது காலம் கல்லூரியை மேலும்வளரச் செய்தது. 1969 இல் கல்லூரியின் 75 வது ஆண்டுவிழாக் கொண்டாடப்பட்டது. இவரைத் தொடர்ந்து திரு.ஆனந்தக்குமாரசாமி அவர்கள்கல்லூரித்தலைமைப்பதவியை ஏற்றுக்கொண்டார். அவர்களைத் தொடர்ந்து திரு.வி.கந்தவனம்அவர்கள் அதிபரானார். இவரது செயற்றிறன் காரணமாக கல்லூரியின் ஆரம்பப்பாடசாலைக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்;டது. கவிஞர் கந்தவனத்தைத்தொடர்ந்து திரு.மு.சிவராசரத்தினம் அவர்கள் அதிபரானார். இவருக்குப்பின் திரு.வி.சிவசுப்பிரமணியம் அவர்கள் அதிபரானார். சின்னப்புத்தம்பதியினரின் புலமைப்பரிசில் திட்டத்தைத்திறம்பட நடத்தினார். இப்புலமைப்பரிசில் திட்டமானது வங்கியில் வைப்புச்செய்யப்பட்ட ஒரு தொகைப்பணத்தின் வட்டியைக்கொண்டு வருடந்தோறும் பணப்பரிசு வழங்குதலுடன் பரிசளிப்பினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதனைக்குறிக்கோளாகக் கொண்டது.

அருணோதயக்கல்லூரியின் பதில் அதிபர்களாகவிருந்து கடமையாற்றியோரில் திரு.அ.விஸ்வநாதன்,திரு.மு.கதிர்காமசேகரம், திரு.க.சுப்பிரமணியம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களைத் தொடர்ந்து திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், திரு.கனகசபை, திரு.மு.செல்லையா ஆகியோரும் சிறப்பாகக்கடமையாற்றினர்.

கல்லூரியின் பழையமாணவரான திரு.ந.சிவபாதம் அவர்கள் 1980இல் அதிபராக பதவியேற்றார். இக்காலத்தில் உடற்பயிற்சியாசிரியர் திரு.எ.தம்பித்துரை அவர்களின் பயிற்சியில் சென்றஉடற்பயிற்சிக்குழு தேசியரீதியில் தங்கப்பதக்கத்தினை அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் பெற்றுச்சாதனை படைத்தது. 1982இல் கல்லூரி மின்சாரவசதியைப் பெற்றது. இவ்வாண்டில் க.உருத்திரன் என்றமாணவன் க.பொ.த.(சாதாரண) பரீட்சையில் எல்லாப்பாடங்களிலும் விசேடசித்தி பெற்றுச்சாதனை படைத்தான். 1983இல் கல்லூரி தொலைபேசி வசதியைப்பெற்றது.

1992 ஆம் ஆண்டில் நாட்டின் போர்ச்சூழல் காரணமாகக்கல்லூரி இடம்பெயர்ந்து மருதனார்மடத்திலுள்ள இராமநாதன் கல்லூரியில் இயங்கியது. 1993 இல் திரு.சிவபாதம் அவர்கள் பதவியுயர்வுபெற்றுச்செல்ல திரு.அ.சிறிக்குமரன் அவர்கள் பதவியேற்றார். இவரைத் தொடர்ந்து திரு.இ.மகேந்திரராஜா அவர்கள் பதவியேற்றார். அளவையில் சிதைந்து போன கல்லூரியின் கட்டமைப்பினை மீளமைத்து கல்லூரியை மீண்டும் அளவெட்டியில் இயங்கவைத்த பெருமை இவரைச்சாரும்.

  • 2007 இல் கடமையேற்ற எமதுபாடசாலையின் முன்னாள் மதிப்பிற்குரிய ஆசான் பண்டிதர் நாகலிங்கம் அவர்களின் புத்திரன் திரு.நா.கேதீஸ்வரன் பாடசாலையை புகழின் உச்சிக்குகொண்டு செல்வதை நாம் நிகழ்காலத்தில்காணலாம்.இவரது காலத்தில் மீண்டும் எமது பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவு ஆரம்பிக்கப்படுவதோடு பல மாணவர்களை மருத்துவபீடத்திற்கும் பொறியியல் பீடத்திற்கும் அனுப்பிகல்லூரி அன்னைசாதனை படைப்பாள் என திடமாக நம்பலாம். விளையாட்டுத்துறையிலும் சாதனையின் உச்சியில் நிற்கின்றது. 2009 வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் 19 முதலிடங்களைப்பெற்று வரலாற்றுச்சாதனை படைத்து நிற்கின்றது. எல்லாவற்றிற்கும் சிகரம்வைத்தாற் போல் 2007 இல் மாணவன் செ.நவநீதன் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் கோலூன்றிப்பாய்தலில் வெண்கலப்பதக்கம் பெற்றுச்சாதனை படைத்தமையையும் 2008 இல் தேசியமட்டத்தில் செல்வன். கோ.கணாதீபன் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் கோலூன்றிப்பாய்தலில் வெண்கலப்பதக்கம் பெற்றுச் சாதனை படைத்தமையையும் அதே ஆண்டில் செல்வி ச.தனுஜாகோலூன்றிப்பாய்தலில் தங்கப்பதக்கம் பெற்றுச்சாதனை படைத்தமையும் காணப்படுகின்றது. யாழ் மாவட்டத்திலேயே தேசியமட்டத்தில் முதன் முதலாக எமது பாடசாலைதான் தனிநபர் மெய்வல்லுனர்நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து நிற்கின்றது. இச்சாதனைகளுக்கு காரணகர்த்தாக்களாக அதிபரின் ஊக்குவிப்பும் விளையாட்டுத்துறைமுதல்வர் திரு.சி.சுபாஸ்கரன், உடற்கல்வி ஆசிரியர் திரு.வி.பாகீஸ்வரன் அவர்களின் கடின உழைப்புமே காரணமாகும். விளையாட்டுத்துறைச் சாதனைகள் போன்று கல்வித்துறையிலும் எமது பாடசாலையின் சாதனை தொடரும் என்பது திண்ணம். தழிழ்தினப்போட்டியிலும் எமது கல்லூரி தேசியமட்டத்தில் பதக்கம் பெறத்தவறவில்லை. கு.யஸ்மின்கிறிஸ்ரலா என்ற மாணவி தேசியமட்ட தமிழ்த்தினப் போட்டியில் இலக்கணஅறிவில் தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக் கொண்டார்.

  • 2007, 2008ம் ஆண்டுகள் அருணோதயக்கல்லூரியின் வரலாற்றில் பொற்காலமாகக் காணப்படுகின்றது.

  • 2006 இல் ஒரு மாணவர்கூட சித்தியடையாதநிலையில் 2007 இல் தரம் 5 புலமைப்பரிசில்பரீட்சையில் 6 மாணவர்கள் சித்தியடைந்தனர். 2008 இல் 7 மாணவர்கள் சித்தியடைந்தனர்.

  • க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் புள்ளிகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2007 இல் க.பொ.த(சா.த) உயர்பெறுபேறாக 9A,B காணப்பட்டது.

  • 2007 இல் க.பொ.தஉயர்தரப்பெறுபேறு மாவட்டமட்டத்தலேயே குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய வகையில் உயர்வாகக் காணப்படுகின்றது. ஒரு பாடத்தினைத்தவிர மிகுதி ஏனைய பாடங்கள் யாவும் 100% சித்தி காணப்படுதல் சிறப்புக்குரியதாகும். வணிகத்துறையில் 2 மாணவர்கள் 3A சித்தி பெற்றுள்ளதும் ஒரு மாணவி மாவட்டநிலையில் 2ம் இடத்தைப்பெற்றும் பாடசாலைக்கு பெருமை தேடித்தந்தனர்.

பாடசாலை உத்தியோகபூர்வ இணையத்தளம்.

arunodaya

http://arunodayacollege.com